(இ - ள்.) ஒள் எரி நெறிப்பட்டன்ன - ஒள்ளிய நெருப்புக்கற்றை ஒழுங்குற அமைந்தாற் போன்ற, சுரியுளை - சுருண்டடர்ந்த பிடரிமயிரையும், மலைகண் போழும் - மலையிடத்தைப் பிளக்கும் வலிமையுடைய, வள்ளுகிர் - வளைந்த நகங்களையும், மதர்வை - களிப்பையும், திங்கட்குழவி வாள் எயிற்று - பிறையை ஒத்த ஒளியுடைய பற்களையும், பைங்கண் உள்ளெரி உமிழ நோக்கி - பசியகண்களில் தீக்காலப் பார்த்து, உரும் என அதிரும் - இடிஇடித்தாற்போல முழங்கும், பேழ்வாய் - பெரிய வாயையும் உடையதோர், கொள்அரி உருவுகொண்டான் - சிங்கத்தின் உருவத்தை மேற்கொண்டான் ; (அவன் யாரெனில்) கொடியவன் கடியசூழ்ந்தான் - தீயவனும் தீமை செய்ய ஆராய்ந்து முற்பட்டவனும் ஆகிய அரிகேது - என்பான், (எ - று.) கோளரி - கொள்ளரி என விகாரமெய்தி நின்றது. அரிகேது, சுரியுளை, வள்ளுகிர், வாளெயிறு, பைங்கண், அதிரும் பேழ்வாய், ஆகிய இவையிற்றை உடைய அரிமாவுருக் கொண்டான் என்க. |