அவ் வரிமாவின் செயல்

698. இலைத்தடஞ் சோலை வேலி 1யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மண்புடை 2பெயர முந்நீ
ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்.
 

    (இ - ள்.) இலைத்தடம் சோலைவேலி இமவந்தம் அடைந்து இலைகள் செறிந்த
அகன்ற பொழில்களை வேலியாகவுடைய இமயமலையை எய்தி, நீண்ட சிலைத்தடம்
தோளினார்தம் சிந்து நாடதனைத் சேர்ந்து - நெடிய விற்படை பொருந்திய தோளையுடைய
விசய திவிட்டருடைய சிந்து நாட்டையடைந்து, மலைத்தடம் பிளந்து சிந்த - மலையிடங்கள்
பிளவுபட்டு திருமாறும், மண்புடை பெயர - நிலம் நடுங்குமாறும், முந்நீர் அலைத்துடன்
கலங்கி விண்பால் அதிர - கடல் திரையெடுத்துக் கலங்கி விசும்பு அதிர ஒலிக்குமாறும்,
நின்று உரறியிட்டான் - நின்று முழக்கம் செய்தான், (எ - று.)

     அரிகேது அரிமாவாகி, இமயமலை வழிச்சென்று சிந்து நாட்டை எய்தி, மலைபிளந்து சிந்தவும், மண்புடை பெயரவும், முந்நீர் கலங்கவும், விண் அதிரவும் முழங்கினான் என்க.
 

( 126 )