(இ - ள்.) பொடித்தலை புலம்பி - மணல்பரந்த வெளியில் எதிர் முழக்கொலி எழாநிற்பவும் ; கானம் போழ்ந்து - காடுகள் பிளந்து போகவும், மாநெரிந்துவீழ - அதன்கண் உறையும் விலங்கினங்களின், உடல்நெரிந்து வீழவும், அடித்து அலைகலங்கி - அவ்வொலி தாக்கி அலைத்தலாலே கலக்கமுற்று, வேழம் பிடிகளோடு அலறி ஆழ - களிறுகள் பிடியானை களோடு கதறி வீழவும், புடைத்துழி - நெல்லை முறத்திலிட்டுப் புடைக்கும் பொழுது, பதடிபோல - பதர்கள் பறந்து வீழ்தல்போல, துறுகற்கள் புரண்டு பொங்க - மலையடிவாரங்களில் கிடக்கும் குண்டுக் கற்கள் புரண்டு குவியவும், இடித்தலின் - இடிபோல முழக்கம் செய்தலாலே, மனித்தர் எல்லாம் - அந்நாட்டின் வாழும் மனிதர்கள் எல்லோரும், எயிறுறஇறுகி - பற்கள் கிட்டி, சோர்ந்தார் - மூர்ச்சையுற்றனர், (எ - று.) அடித்தலை கலங்கி - அடித்து அலைத்தலால் கலங்கி என்க. அரிகேது முழங்கியவுடன் வீழ, அலறியாழ, புரண்டு பொங்க. மனிதர் எல்லாம் பல்லிறுகி மூர்ச்சையுற்றனர் என்க. |