இதுவுமது
708. புழற்கைத் திண்ணுதி மருப்பின பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கிநின் 1றழன்றன நிலையிடம் புகுக
வழற்க 2ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான்.
 

      (இ - ள்.) புதல்கை திண் நுதி மருப்பின - தொளை பொருந்திய துதிக்கையையும்
உறுதியான நுனியுடைய கொம்புகளையும் உடைய, பொருகளிறு - போர் யானைகளாகிய,
நிழற்கண் நோக்கி நின்று அழன்றன - தம் நிழலைத் தாமே பார்த்து நின்று சினக்கின்ற,
இவைதாம் - இவைகள், நிலையிடம் புகுக - இவைகட்டும் தறியிடத்தில் அடைவனவாகுக;
கண் அழல் நாறும் - கண்களில் தீக்காலும், அடுபடை தொடுதலை மடியா - கொல்லும்
படைதாங்குதலில் சோம்புதலில்லாத, தொழிற்கணாளரும் - போர்த்தொழிலையே
கண்ணாகப் போற்றும் நம் மறவரும், தவிர்கென - எம்மொடு தொடர்ந்து வருதலைத்
தவிர்வாராக என்று, சூளுற்றான் - வஞ்சினம் சாற்றினான், (எ - று.)
இக்களிறுகள் தம் சேவகம் புகுதுக, மறவரும் எம்மொடு வருதலைத் தவிர்க! யான் தனிச்
சென்று அவ்வரிமாவைக் கொல்வல் என்று சூளுற்றான் என்க.
 

( 136 )