மிகாபதி விசயனைப் பெறுதல் | 71. | பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க் கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத் தண்ணிலா வுலகெலாந் தவழ்ந்து வான்கொள வெண்ணிலாச் சுடரொளி 1விசயன் றோன்றினான். | (இ - ள்.) பெண்நிலாம் தகை-பெண் தன்மைக்குப் பொருந்திய நலங்கள் அமைந்த; பெருந்தேவி - பயாபதி மன்னன் முதல் மனைவியான மிகாபதியினது; பேர் அமர்க்கண்ணில்-பெரும்போர் செய்யவல்ல கண்களில்; ஆம்களிவளர் உவகை கைம்மிக - மிகுந்த களிப்புண்டாதற்குக் காரணமான மகிழ்ச்சி சிறக்கும் உவகை மிகுதியாக; தண்நிலா - குளிர்ந்த நிலவொளி; உலகு எலாம் தவழ்ந்து வான்கொள - நிலவுலகெங்கும் பரவித் தேவருலகத்தையுஞ் சென்றடையுமாறு நின்ற; அ வெள்நிலா சுடர் ஒளி-அந்த வெண்திங்களின் பேரொளியைத் தன்னிடத்தே கொண்ட; விசயன் தோன்றினான் - விசயன் என்பவன் பிறந்தான். (எ - று.) பெண்ணில் ஆம் தகை எனப் பிரித்துப் பெண்களிலே சிறந்த பெருமையையுடைய என்று பொருள் கூறினுமாம். தகை-நாணம் முதலிய பெண்மைக் குணங்களும் அழகுமாம். பெருந்தேவி - மூத்த மனைவியாகிய மிகாபதி. உவகை - தொழிற்பெயர். விசயன் என்னும் வட சொல்லுக்குச் சிறப்பான வெற்றியை யுடையவனென்று பொருள். தன்னை வெல்பவர் எவரும் இலலாதவனெனினுமாம். | (2) | | |
|
|