(இ - ள்.) புழல்கை மால்களிறு - தொளையமைந்த துதிக்கையையுடைய பெரிய யானையினது, எருத்திடை புரோசையிற் பயின்ற - பிடரிற் கட்டப் பட்டுள்ள புரோசைக் கயிற்றில் மிதித்துப் பயின்ற, கழல்கொள் சேவடி வீரக்கழலையணிந்த செந்நிற அடிகள், கருவரை இடைநெறி கலந்த - கரிய மலைகளின் ஊடே செல்லும் வழிகளில் பரவியுள்ள, அழல் கொள்வெம் பொடி அவைமிசை - வெப்பமிக்க வெவ்விய மணலின்மேல், புதைய - பதியும்படி, அவ்வரிமான் - அந்தச் சிங்கம், தொழிற்கொண்டு - கருமத்தை மேற்கொண்டு, ஆருயிர் செகுக்கின்ற சூழல் - அரிய உயிர்க்குலங்களைக் கொன்றழிக்கின்ற இடத்தை, சென்று அடைந்தார்- போய்ச் சேர்ந்தோர், (எ-று.) புரோசை - யானைக் கழுத்திடு கயிறு. யானையெருத்தத்தே புரோசைக் கயிற்றிலே மிதித்துப் பயின்ற தம் சேவடி நெறி கலந்த வெம்பொடியிற் புதையச் சென்று அரிமா ஆருயிர் செகுக்கின்ற சூழலை அடைந்தார் என்க. |