(இ - ள்.) அடைந்த வீரரைக் காண்டலும் - அவ்வாறு வந்து சேர்ந்த விசய திவிட்டர்களைப் பார்த்தவுடனே, அழல் உளை அரிமா - தீயை ஒத்த பிடரிமயிர்க் கற்றையையுடைய (அரிகேதுவாகிய) அச்சிங்கம், உடைந்துபோக - அவ்வீரர்கள் மனமுடைந்து ஓடிவிடுதலைக் கருதி, ஓர்இடி இடித்தென - ஒப்பற்ற பெரிய இடி ஒன்று இடித்தாற்போல, உடன்று இடிப்ப - சினந்து முழங்க, இறுவரை இடிந்துபோயின - அம் முழக்கத்தின் அதிர்ச்சியால் பெரிய மலைகள் இடிந்து சிதறின, அங்குடனே - அப்பொழுதே, துறுகல் - குறுங்கற்கள், நெரிவொடு புரளா - நெரிந்து புரண்டு, பொரி எனப் பொடிந்து போயின - நெற்பொரிகளைப் போலத் துகளாய் உதிர்ந்தன. (எ - று). துறுகல் - சிறிய குன்றுமாம். விசயதிவிட்டரைக் கண்டவுடன் அரிகேதுவாகிய அவ்வரிமா, அவர்கள் அஞ்சி ஓடுதலை விரும்பி, இடி இடித்தென முழங்க, மலை துறுகல் முதலியன பொடிந்தனவாய், பொரிகள்போல் துள்ளிப் புரண்டன என்க. |