அம் மாய அரிமா குகையிற் புக்கொளித்தல்
717. மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை 1நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
னோடி 2யிட்டன னொளிவரை முழையகத் தொளித்தான்.
 

     (இ - ள்.) மூடியிட்டன முகிற்கணம் முரன்று - மேகங்கள் ஒலித்து விசும்பைக்
கவிழ்ந்துகொண்டன, கொடு முடித்துறு கற்கள் - சிகரங்களின் குறுங்கற்கள், நொறுங்காய்க்
கூடியிட்டன - துகள்களாகிக் குவிந்தன, வனதெய்வம் குளிர்ந்தாங்கு ஆடியிட்டன -
வனதேவதைகள் உளமகிழ்ந்து ஆடின, அரிஉருவுடையான் - சிங்க உருவத்தையுடைய
அரிகேது, ஓடியிட்டனன் ஒளிவரை முழையகத்து ஒளித்தான் - விரைந்தோடி
மறையுமி டமாகிய மலையினது குகையில் ஒளிந்துகொண்டான், (எ - று.)

     வனதெய்வங்கள் இவனால் தீயோர் அழிவர் நல்லோர் வாழ்வர் என்று கருதி
மகிழ்ந்து ஆடின என்க.

     அரிகேது மெய்ச்சிங்கங்கள் உறையுமொரு முழையிலே ஓடி மறைந்தான் என்க.
 

( 145 )