(இ - ள்.) மூடியிட்டன முகிற்கணம் முரன்று - மேகங்கள் ஒலித்து விசும்பைக் கவிழ்ந்துகொண்டன, கொடு முடித்துறு கற்கள் - சிகரங்களின் குறுங்கற்கள், நொறுங்காய்க் கூடியிட்டன - துகள்களாகிக் குவிந்தன, வனதெய்வம் குளிர்ந்தாங்கு ஆடியிட்டன - வனதேவதைகள் உளமகிழ்ந்து ஆடின, அரிஉருவுடையான் - சிங்க உருவத்தையுடைய அரிகேது, ஓடியிட்டனன் ஒளிவரை முழையகத்து ஒளித்தான் - விரைந்தோடி மறையுமி டமாகிய மலையினது குகையில் ஒளிந்துகொண்டான், (எ - று.) வனதெய்வங்கள் இவனால் தீயோர் அழிவர் நல்லோர் வாழ்வர் என்று கருதி மகிழ்ந்து ஆடின என்க. அரிகேது மெய்ச்சிங்கங்கள் உறையுமொரு முழையிலே ஓடி மறைந்தான் என்க. |