(இ - ள்.) தாரித்திட்ட தன் தறுகண்மைக் குணங்களின் - தான் தரித்துள்ள அஞ்சாமைக் குணங்கள் காரணமாக, உலகை வாரித்திட்டு - உலகை வெல்ல விரும்பிப் பகையை வரித்து, இவண் வந்ததோர் அரி - இங்கு நம்மைத் தேடிவந்த ஒப்பற்ற பகைச்சிங்கம் போலும், என மதியா - என்று எண்ணி, பூரித்திட்ட தன் பெருவலியோடு புகழுடை அரிமா - பூரிப்படைந்த ஆற்றலும் புகழும் உடைய அச்சிங்கம், பாரித்திட்டது - வெளிப்பட்டது, பனிவிசும்புடையவர் பனித்தார் - குளிர்ந்த வானுலகில் வதியும் அமரர்கள் நடுங்கினார்கள், (எ - று.) தாரித்தல் - தரித்தல். வாரித்தல் - வரித்தல் - விழைதல்: நீட்டும் வழிநீட்டல் பூரித்தல் - மகிழ்ச்சியால் உடல் விம்முதல் பாரித்தல் - வெளிப்படுதல், தறுகண்மையிற் செருக்குடைய ஓர் அரிமா பகையரிமாவைத் தேடி என்பால் வந்துளதுபோலும் எனமகிழ்ந்து அவ்வரிமா வெளிப்பட்டது, அமரர்கள் அஞ்சினர் என்க. |