729. புள்ளுங் 1கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி ணுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழ
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் 2றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்.
 

      (இ - ள்.) புள்ளும் கொல்லென வொலிசெயும் - பறவைகளும் “கொல்“ என்று
ஆரவாரிக்கும், பொழில்புடையுடைய - சோலைகளைப் பக்கத்தே உடையனவாய், கள்ளின்
நுண் துளி கலந்து கால் அசைத்தொறும் - காற்று தேனினது நுணுகிய துளிகளை
அளாவிக்கொண்டு இயங்குந்தோறும், கமழ - மணம் கமழாநிற்பவும், உள்ளும் -
உள்ளிடங்களிலும், தாதுகொண்டு - மகரந்தத்துகளை அப்பிக்கொண்டு, ஊதுவண்டு அறாதன
- தேன் தேரும் வண்டுகளை ஒழியாதனவாயும், ஒளிசேர் - ஒளியையுடையனவாய்,
வெள்ளென் தோன்றுவ - வெண்மையாகக் காணப்படுவன, விறலோய் - ஆற்றல்
மிக்கோனே, கயம் அல்ல - குளங்கள் போலத் தோன்றுவனவேனும் அவைகள் உண்மையில்
குளங்கள் அல்ல, பளிக்கறை - பளிக்குப் பாறைகள் ஆகும், (எ - று.)

     பறவைகள் ஆரவாரிக்கவும் சோலைகளைப் பக்கத்தே யுடையனவும் ஊது
வண்டறாதனவும் காற்றுத்தேனைத் துளித்தல் அறாதனவுமாயின என்க. வெள்ளெனத்
தோன்றுவன தண்கயம் அல்ல; பளிக்குப் பாறையாங் கண்டாய் என்றான் என்க.
 

( 157 )