(இ - ள்.) ஆளி மொய்ம்ப - அரிமாவை ஒத்த ஆற்றலுடையோனே! காள்ஐ வண்ணத்த களிவண்டு - கரிய அழகிய நிறமுடைய களிப்பு மிக்க அளிகள், கதுவிய துகளால் - போர்க்கப்பட்ட மகரந்தத்தோடு, தாளைமூசிய - நாளங்களில் மொய்த்தலையுடைய, தாமரைத் தடம்பல - தாமரைகள் செழிப்புற்றுள்ள இடங்கள் பல, அவற்றுள் - அவ்விடங்களுள், அகலிலை அலரொடுங் கிழிய - அகன்ற தாமரையின் இலைகளும் மலர்களும் கிழிந்து போம்படி, வாளை பாய்வன - வாளைமீன்களும் விசைத்துப்பாய்கின்றன, கயமல்ல - அங்ஙனமிருந்தும் அவைகள் நீர்நிலைகளல்ல, மறவோய் - வீரனே! வனத்திடர், இடையறாது அருவி பாய்ந்தோடும் காட்டினுள்ள திடர்களேயாகும், (எ - று.) காளம் ஐவண்ண எனக் கண்ணழித்துக் கொள்க. காளம் - கருநிறம். ஐ - அழகு. காளம் காள் என்று ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு நின்றது, மலைச்சாரலில் உள்ள சாய்ந்த திடர்களில் இடையறாது நீரோட்டம் நிகழ்தலின், அங்குத் தாமரைகள் செழிப்புற்றுள்ளன. வாளைகள் துள்ளுகின்றன என்பதாம். |