(இ - ள்.) துள்ளி வாரும் புனல் துளங்கும் - துள்ளுதலுடனே ஒழுகும் நீர் ததும்புகின்ற இயல்புடைய, பாறைக்கல் அத்துள் - பாறையாகிய சந்திரகாந்தக் கல்லினது அகத்தே, உராவிக்கிடந்து - உராய்ந்து கிடந்து, ஒளிரும் ஒண்கேழ்மணி - ஒளிருகின்ற நிறங்கெழீஇய முத்து, நள்ளிராவின்றலை - நடுஇராவின்கண், நகுப - விளங்குவன, வானத்திடை - விசும்பின்கண், நாள் அம்பிள்ளைப்பிறை - தோன்றுதற்குரிய நாளிற்றோன்றிய அழகிய இளம்பிறை, பிறழ்தல் போலுங்கள் - ஒளிர்வதை ஒக்கும், (எ - று.) பாறைக்கலத்துள் - பாறைக்கல் அத்து உள், எனப்பிரித்திடுக - அத்து; சாரியை, போலுங்கள்; கள் விகுதிமேல் விகுதி. பாறையிடத்தே ஒளிரும் ஒண்கேழ் மணி, நள்ளிரவில் ஒளிரும் பிறைபோலுதலைக் காண்; என்றான் என்க. |