வேறு
733. துள்ளிவா ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை 1பிறழ்தல்போ லுங்களோ.
 

      (இ - ள்.) துள்ளி வாரும் புனல் துளங்கும் - துள்ளுதலுடனே ஒழுகும் நீர்
ததும்புகின்ற இயல்புடைய, பாறைக்கல் அத்துள் - பாறையாகிய சந்திரகாந்தக் கல்லினது
அகத்தே, உராவிக்கிடந்து - உராய்ந்து கிடந்து, ஒளிரும் ஒண்கேழ்மணி - ஒளிருகின்ற
நிறங்கெழீஇய முத்து, நள்ளிராவின்றலை - நடுஇராவின்கண், நகுப - விளங்குவன,
வானத்திடை - விசும்பின்கண், நாள் அம்பிள்ளைப்பிறை - தோன்றுதற்குரிய
நாளிற்றோன்றிய அழகிய இளம்பிறை, பிறழ்தல் போலுங்கள் - ஒளிர்வதை ஒக்கும்,
(எ - று.)

     பாறைக்கலத்துள் - பாறைக்கல் அத்து உள், எனப்பிரித்திடுக - அத்து; சாரியை,
போலுங்கள்; கள் விகுதிமேல் விகுதி. பாறையிடத்தே ஒளிரும் ஒண்கேழ் மணி, நள்ளிரவில்
ஒளிரும் பிறைபோலுதலைக் காண்; என்றான் என்க.
 

( 161 )