வேறு
735. பருவமோ வாமுகிற் படலமூ டிக்கிடந்
1திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழிந்
தருவி 2யோ வாபுரண் டசும்புபற் றித் 3தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா 4கார்களே
 

      (இ - ள்.) பருவம் ஓவா முகிற் படலம் - பெய்தற் பருவத்தில் ஒழிதலில்லாத மேகக்
குழாங்கள், மூடிக்கிடந்து - அம்மலைப்பகுதியை மூடியவாறே கிடத்தலால், இரவுண்டு
ஏனைப்பகல் இல்லை - அங்கு எப்பொழுதும் இராக்காலமாக இருப்பதல்லால்
மற்றைப்பகற்காலம் தோன்றுவதில்லை, ஒல் என்றிழிந்து - ஒல் என்னும் ஓசையுடனே
இறங்கி, அருவி ஓவா புரண்டு அசும்பு - நீர் அருவிகள் ஓய்தலில்லாதே புரண்டு
ஒழுகுதலை, பற்றித் தடவரையின் தாழ்வார் நிலம் - இடையீடின்றிப் பெற்று அகன்ற
மலையினது சரிவிற் பொருந்திய நிலங்கள் கிடத்தலின், வழங்க லாகார்கள் - அவ்விடத்தே
மக்கள் வழங்குதலிலர், (எ - று.)

     எப்போதும் கார்ப்பரும் போலே அவ்வரைகளில் முகில் குழுமி மூடிக் கிடத்தலானும்,
ஒழியாது அருவி பாய்தலானும், ஆங்கு மக்கள் வழங்கல் அரிதென்றான் என்க.

( 163 )