736. சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊர 5லோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல.

     (இ - ள்.) சூரல்அப்பித் தொடர்ந்து அடர் - பிரப்பங் கொடிகள் பற்றிப்படர்ந்து
அடர்தலாலும், துளங்கும் அரில் - அசைதலையுடைய குறிய முட்புதல்கள்,
வேரலோடுமிடைந்து - மூங்கிற்காடுகளோடு செறிதலாலும், இருண்டு - இருண்டு
கிடத்தலாலும், சாலப்பல சாதி - அக்காட்டில் வாழும் இயல்புடைய மிகவும் பலவாகிய
மிலைச்சச்சாதி மானிடர், ஊரல் ஓவாது - அங்குமிங்கும் திரிதலை ஒழியாமல், உயிரை -
உயிரினங்களை, கனன்று - சினந்து, விடார் - பற்றிவிடாதவர்களாய், விண்டு - அவற்றைப்
பிளந்து, உண்டிடுதலால் - தின்றுவிடுதலால், சாரலாகாதன - மானிடர்கள் வழங்கவியலாதன
இவ்விடங்கள், (எ - று.)

     சாதி உயிரை அனன்று விடார் விண்டு உண்டிடுதலால் சாரலாகாதன என்றியைத்துக்
கொள்க. சாதி மானிடசாதியினரைச் சேர்ந்த ஊனுகர் மிலைச்சர் என்க. ஊன்தின் சாதி
உண்மையில் அங்குப்பிறர் சாரலாகா தென்றான் என்க.
 

( 164 )