741.

இதுவித்தாழ் 1வார்நிலத் தியற்கைமே 2லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் 3பா றையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று 4துஞ் சன்னிலைக்
கதியின்வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே.

     (இ - ள்.) இது - இதுகாறும் கூறியது, இத்தாழ்வார் நிலத்தியற்கை - இம்மலைச்சரிவு
நிலங்களின் தன்மைகளாம், மேலால் பல மதியம் பாரித்தென - இனி
இம்மலைச்சிகரங்களிலோ எனில், பல திங்கள் மண்டிலங்கள் ஒரு சேர ஒரு காலத்திலே
வெளிப்பட்டாற் போன்ற, மணிக்கற் பாறையின் மிசை - மாணிக்கக் கற்சிகரங்களின் மேல்,
நிதியம்பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் - பல்வேறு செல்வங்ளும் மிகுத்துக் கிடந்து ஒளிவீசி
மிளிர்ந்து கிடத்தல் ஆகிய காட்கிகள், நிலைக்கதியின் வாழ்வாரையும் - அவாவறுத்து
நிலைத்த கேவலஞானத்தின் நின்று வாழும் துறவியரையும், கண்கள் வாங்குங்கள் -
கண்கவரும், (எ - று.)

     பொறியடக்கமுடைய துறவிகள் கண்களையும் இம் மலைநிலத்தே கிடந்திமைக்கும்
மதியம்பாரித்தன்ன நிதியம் கவரும் என்றான் என்க.
 

( 169 )