| Choolamani |

வேறு

754. பொன்விரிந் 2தனையபூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே.

     (இ - ள்.) முன் - நம்முன்பு அதோ; பொன் விரிந்தனைய பூங்கோங்கும் வேங்கையும்
- பொன்னை விரித்தாற்போன்று மலர்ந்து திகழும் அழகிய கோங்கமரமும் வேங்கைமரமும்,
விரிந்து உக்கன - தாம் மலர்ந்து சொரிந்தனவாகிய பூக்கள், மொய்த்த கற்றலம் - செறிந்த
கல்லிடங்கள், மின்விரிந்து இடை இடை விளங்கி - ஒளிவீசுமாறு இடையிடையே திகழ்ந்து
தோன்றி, இருள்முகில் - இருண்டமேகம், இந்திரன் வில்முறிந்து வீழ்ந்த போலும் -
இந்திரவில்லோடு முறிந்து வீழ்ந்து கிடத்தலை ஒக்கும், (எ - று.)

     கோங்கம்பூவும் வேங்கைப்பூவும் உதிர்ந்து கிடக்கும் கற்பாறை, இடையிடையே
மின்னல் விரிந்து தோன்றும் முகில்கள் வில்லோடே வீழ்ந்து கிடப்பனபோற் றோன்றும்
என்க.
 

( 182 )