758.

இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
3தணந்தொளி விடாத வெண்டா மரைததைந் தனையதொன்றே.

     (இ - ள்.) தேன் இணைந்து முழங்க - அளிகள் தம் துணைகளுடனே சேர்ந்துபாட,
விண்ட ஏழிலம்பாலை - மலர்ந்த ஏழிலைம்பாலை மரத்தினது, வெண்பூ மணந்து - வெளிய
பூ மணங்கமழப் பெற்று, தாது அணிந்து - பூந்துகள் போர்க்கப்பட்டு, தோன்றும் -
காணப்படுகிற, மரகத மணிக்கற் பாறை - மரகதம் என்னும் கல்லாலியன்ற பாறை,
கணங்கெழு களி  வண்டால - கூட்டமாகக் குழீஇய களிப்புடைய வண்டுகள் பாட, பாசடை கலந்த பொய்கை - பசிய இலைகள் அடர்ந்த குளம், ஒளி தணந்து விடாத - ஒளியகலாத,
வெண்டாமரை ததைந்தது அனையது ஒன்றே - வெள்ளிய தாமரைமலர்கள் செறியப்பெற்ற
காட்சியை ஒப்பதொன்றாம், (எ - று.)

ஏழிலைம்பாலை மலர்ந்து தாதணிந்து நிற்றலையுடைய மணிக்கற்பாறை வெண்டாமரைத்
தடம்போல் விளங்கும் என்க.

( 186 )