வேறு

760.

வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்.
 

     (இ - ள்.) நிறைபுனல் தடத்து வாழ்வார் - ஈண்டுள்ள நிறைந்த நீர்நிலைகளில்
வாழ்பவர்கள், இருபுடையும் வார் வீக்கி - இரண்டு பக்கங்களினும் கச்சிறுக்கிக் கட்டப்பட்டு,
வடம் சுமந்து - மணிவடங்களைத் தாங்கி, எழுந்து - பணைத்தெழுந்து, வேங்கை ஏர்
இருஞ்சுணங்கு சிந்தி - வேங்கைமலரின் நிறம் போன்ற பொன்னிறமான பெரிய தேமல்
பாய்ந்து, எழுகின்ற இளமென் கொங்கை - எழுச்சியையுடைய இளைமையுடைய மெல்லிய
முலைகளையும், அங்கொண்டை கார் இருங்குழல் - அழகிய கொண்டையாகப் புனையப்
பெற்ற கரிய பெரிய கூந்தலையும், கதிர்நகை கனகப் பைம்பூண் - சுடரால் திகழ்கின்ற
பொன்னாலாகிய பசிய அணிகலன்களையும் உடைய, நீரர மகளிர் கண்டாய் - நீரர
மகளிர்கள் ஆவார் என அறிதி, (எ - று.)        

( 188 )