யாக்கையால் எய்தும் பயன்
774.

கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் 1களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
2பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னோ.

      (இ - ள்.) பெற்ற இவ் உடம்பு - அரிதிற் பெற்றுடைய இம்மானிட யாக்கை, கற்றவர்
- மெய்ந்நூல்களை ஓதியுயர்ந்தோர், கடவுள் தானம் சேர்ந்தவர் -
மெய்ப்பொருளின்றன்மையை இவ்வுடம்பினின்றே எய்தினவர், களைகணில்லார் - தமக்குக்
களைகணாவாரை யில்லாதவர், அற்றவர் - ஏழைகள், அந்தணாளர் - அந்தணர்கள்,
அன்றியும் அனைய நீரார்க்கு - அல்லாமலும் இன்னோரன்ன பிறர்க்கும், உற்றதோர்
இடுக்கண் வந்தால் - பொருந்திய இடையூறு வந்தபொழுது, உதவுதற்கு உரியது - விரைந்து
அவ்விடையூறு களைந்து அவர்க்கு உதவி செய்தற்கே உரியதாம், அன்று ஆயில் -
அங்ஙனம் உதவுதலின்றானால், இவ்வுடம்பு தன்னாற் பெறுபயன் இல்லை -
இம்மானிடயாக்கையாற் கொள்ளக் கிடந்த பயன் பிறிதொன்று இல்லையாம், (எ - று.)

     மானிட உடல், கற்றவர் கடவுட்டானம் சேர்ந்தவர் களைகணில்லார் அற்றவர்
அந்தணாளராகிய இன்னோரன்னார்க்கு உதவி செய்தற்கே உரித்தாம்; அவ்வுதவி செய்யாவழி
இதனைப் பெற்றிலாதவரே ஆவர் என்க. கடவுட்டானம் - மித்தியாதிருட்டி முதலிய
பதினாக்கு குணத்தானங்களில் ஆறுமுதம் பன்னிரண்டு வரையுள்ள குணத்தானங்கள் என்க.
இவை துறவிகட்குரியன ஆதலால் கடவுட்டானம் என்றார்.

( 202 )