(இ - ள்.) என்று தம் கதையோடு- என்றிவ்வாறு தம் சொல்லாடு தலோடு, இரு நீண்முகில்குன்று சூழ்ந்த, பெரிய நீளிதாய முகில் தவழும் குன்றுகளாற் சூழப்பட்ட - குழு மலர்க்கானகம் சென்று - நிறைந்த மலர்களையுடைய காட்டைக்கடந்து போய், ஓர் வெங்கடம் சேர்ந்தனர் - ஒரு வெப்பமிக்க பாலை நிலத்தை எய்தினர், உச்சிமேல் நின்று வெய்யவனும் - அப்பொழுது வானத்துச்சிக்கண் நின்று கதிரவனும், நிலங்காய்த்தினான் - மேலும் அப்பாலை நிலத்தை வெதும்பச் செய்தான். என்றிவ்வாறு உரை நிகழ்த்தியவாறே விசயதிவிட்டர், ஒரு கொடிய பாலையை எய்தினர்; அப்போது ஞாயிறும் உச்சியினின்று உலகத்தை வெதுப்பினன் என்க. |