783.

பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை 1போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிழ்க் கின்றன காந்தளென்
றத்த லைச்சில மானயர் வெய்துமே.

     (இ - ள்.) பைத்தலைப் படம் நாகம் - நச்சுப் பையையுடைய படப்பாம்பு, அழன்று -
வெம்பி, படமுயர்த்துத் தம் பொய்த்து அளைத்தலை - தம்முடைய உள்ளீடற்ற
வளைகளிடத்தே, போதர - புகச்செல்லுதல் கண்டு, அத்தலைச்சிலமான் - அவ்விடத்திலே
நின்ற சில மான்கள் அவற்றை, காந்தள் - கோடல், கார்செய்வான் கைத்தலம்
முகிழ்க்கின்றன, என்று - வேனிலின் கடுமை பொறாது கார்ப்பருவம் வருதலை விரும்பி
இறைவனைத் தம் மலர்க்கரங்கள் முகிழ்த்து வணங்குகின்றன என்று கருதிச் சென்றுநோக்கி,
அயர்வெய்தும்-அவை காந்தண் மலரன்மை கண்டு வருந்தாநிற்கும். (எ - று.)

     பொய்த்து - உள்ளீடற்றது. பாம்புப் படங்களை வாடிக்கூம்பிய காந்தள் மலர்
மழைபெய்யும் பொருட்டுக் கைகுவித்து வானத்தைக் தொழுவனவாகக் கருதி மான்
அவற்றைத் தின்னச்சென்று ஏமாற்றமடைந்து வருந்தும் என்றவாறு.

( 211 )