785.

துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குதி
னடிய ரல்லதல் 4லாரவ ணில்லையே.
 

        (இ - ள்.) துடியர் - உடுக்கையையுடையவரும், தொண்டகப் பாணியர் -
தொண்டகப்பறையை முழக்கும் கையினரும், வாளியர் - அம்பு, வில் முதலிய
படைக்கலங்களை யுடையவரும், கடிய செய்து - ஆறலைத்தன் முதலிய கொடிய
தொழில்களைச் செய்து, முனைப்புலம் கூட்டுணும் - செருக்களத்திற் கிடைத்த
பொருள்களைக் கூடி உண்பவரும், கடிய நீர்மையர் - தறுகண்மை முதலிய கடுமையான
பண்புடையோரும், கானகங் காக்கும் - நின் ஏவலால் இக்கானகத்தைக் காவல் செய்குநரும்
ஆகிய, நின் அடியர் அல்லது அல்லார் - உன்னுடைய அடிமையாவர் அன்றி அல்லாத
வேறு பிறர், அவண் இல்லை - அக்கடுஞ்சுரத்தில் வாழுநர் இல்லை, (எ - று.)

     “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்கு துயருறுத்தும்
என்பவாகலின், இது குறிஞ்சிதிரிந்த பாலையெனக் கொள்க; அற்றாகலினன்றே
குறிஞ்சிக்குரிய தொண்டகப்பறை கூறியதூஉம், என்க.

( 213 )