802.

வளவா சநிலப் பலவின் சுளையு
மிளவா ழையினின் னெழிலங் கனியும்
1களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனைகொண் டனவே.

      (இ - ள்.) வளம்வாசம் நிலப்பல இன்சுளையும் - செழித்து மணமுடையவாய
நிலத்தின்கீழ் வேரிற்பழுக்கும் பலாமரத்தினது இனிய சுளைகளும், இளவாழையின் எழில்
அங்கனியும் - இளைமையுடைய வாழையின் அழகிய பழங்களும், களமாங்கனியின் திரளும்
- கரிய மாமரத்தின் கனிக்குவியலும், கலவி - ஒன்றுபட்டு, குளம் ஆகிய - பழச்சாற்றின்
குளமாக ஆகிவிட்ட நிலங்கள், யோசனை கொண்டன, ஒருயோசனைத் தொலை உடையன, (எ - று.)
     பலாக்கனி, மாங்கனி, வாழைக்கனி, யாகிய இம் முக்கனிகளும் சிறப்புடைய கனிகள்
என்றுணர்க.

     பலாவின் சுளையும், வாழையின் கனியும், தேமாவின் கனியும் கனிந்தொழுகிய
சாற்றாலே, குளமாகி ஒரு யோசனைத் தொலைகிடந்த தென்றான் என்க. களம் - கருநிறம்;
இது மாமரத்திற்கு அடை என்க.

( 230 )