808.

வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை.

      (இ - ள்.) வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல் - வளராநின்ற செவ்விய
கிடைச்சாகிய அழகு பொருந்திய நெற்றியையும், வளர்செங் கிடையின் ஒளிவவ்விய வாய் -
வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய ஒளியுடைய வாயையும், வளர் செங்கிடையின் -
வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய, வளை - வளையல்களையும், ஆடும் வயல் வளர்
செங்கிடை மாமலர் - ஆடாநிற்பனவும் வயலிடத்தே வளர்வனவுமாகிய செவ்விய
கிடைச்சுகளின் சிறந்த மலர்களாகிய, மல்கு சிகை - பருத்த கொண்டை கயினையும்,
உடையவளும், (எ - று.)

     செங்கிடையாகிய நுதலையும், வாயையும், வளையையும், கொண்டையையும் என்க.
செங்கிடை - ஒருவகைச் செடி; இது - செந்நிறமுடையதாகலின் இங்ஙனம் உருவகித்தனர்.
சிகை - கொண்டை.

( 236 )