812.

மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர
நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
கதிரோ னொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே.

      (இ - ள்.) மதிகாண நிமிர்ந்த மதில் - திங்கள் மண்டிலத்தைக்காண எழுந்தாற்
போன்று உயர்ந்த மதில்களையுடையதாய், மாளிகைச்சிகரம் நுதிமேல நுடங்குகொடி -
மாளிகைகளின் உச்சிமேலவாய்க் கட்டப்பட்டு ஆடுதலையுடைய கொடி, கதிரோன் ஒளிமாழ்க
- ஞாயிற்றின் ஒளி மழுங்குபடி, எழுந்து கலந்தது காண் - உயர்ந்தெழுந்து அதன்
ஒளியோடு கலந்ததனைக் காண்க, நமது ஆர்ஒளி மாநகர் - அங்ஙனம் தோன்றுவது
நம்முடைய பேரொளியையுடைய பெரிய போதனமா நகரமாகும்.
மதிகாண நிமிர்ந்த சிகரத்தோடே, கொடியோடே மாழ்க எழுந்து கலந்தது நமது நகர் காண்
என்க.

( 240 )