(இ - ள்.) புகழோய் - புகழுடைய திவிட்டனே!, அறவேதியர் - அறந்தவறாத அந்தணர் இயற்றிய, ஆகுதி அம்புகை - வேள்வியினின் றெழுந்த அழகிய புகை, ஆர்வுற - நிரம்புதலானே, வேதிகை - ஆண்டுள்ள வேதிகைகளில் உறைந்த, விம்மிய - மூச்சு முட்டிய, ஒண் புறவம் - ஒளியுடைய புறாக்கள், நிறவேதிகை மீது - வண்ணந் தீட்டப்பட்ட அவ்வேள்வி மேடைக்குமேல், நிமிர்ந்த பொழிற் புறவேதிகை - ஓங்கிவளர்ந்துள்ள பூம் பொழிலின் புறத்தேயுள்ள வேதிகைகளிலே, ஏறுவகாண் - குடி ஏறுதலைக் காண்பாயாக, (எ - று.) வேதியருடைய ஆகுதிப் புகையாலே விம்மிய புறவுகள் பொழிலின் புறத்தேயுள்ள வேதிகைகளிலே ஏறுதலைக் காண் என்றான் என்க. புறவுகள் - வேதிகையில் வாழுமியல்புடையன! வேதிகை - மேடை. |