(இ - ள்.) நும் ஈர் அலர்க் குஞ்சி தம்முள் - உம்முடைய ஈரமுடைய மலர்துதைந்த மயில் முடியில், இத் துன்னிய வனத்துகள் துதைந்த ஆறு என்னை? என - செறிந்த வனத்தின்கண் உளதாய இப்பூந்துகள் படிதற்கு வழி யாது? என்று; மன்னவன் அருளலும் - பயாபதி வேந்தன் கேட்டருளலும், மகரவார்குழைமின் இவர் மணிக்கழல் விசயன் செப்பினான் - மகரமீன் வடிவினவாய் இயற்றிய நெடிய குண்டலங்களை அணிந்தவனும் ஒளி தவழும் அழகிய வீரக்கழலையுடையவனுமாகிய விசயன் என்பான் கூறுவானாயினான், (எ - று.) பயாபதி வேந்தன் மக்களை நோக்கி நுங்கள் தலையின்கண் காட்டுப் பூவின் தாதுகள் காணப்படுமாறென்னை? யென விசயன் விளம்புவான் என்க. |