(இ - ள்.) பொங்கொள் பூமருசோலை - பொன்னிறமான மலர்கள் நிரம்பிய சோலைகளாற் சூழப்பட்ட, பொன் அணி புரிசை வேலி - பொன்னாலியன்ற அழகிய மதில்களை வேலியாகவுடையதும், காமரு கபாடவாயில் - விருப்பத்தைச் செய்கின்ற கதவுகளையுடைய தலைவாயில் அமைந்ததும் ஆகிய, கந்தமாதனத்தைக் காப்பான் - கந்தமாதனம் என்னும் நகரத்தைக் காவல் செய்பவனும், தயங்கு சோதி தாமரைத் தார் அணி - திகழ்கின்ற ஒளியையுடைய பொன்தாமரை மலர்மாலை அணிந்த, துரகத்தேரோன் - குதிரை பூட்டிய தேருடையோனும், தேமரு திலதம் கண்ணி திவாகரதேவன் என்பான் - தேன் துளும்பும் சிறந்த முடிமாலையணந்தவனும் ஆகிய திவாகரதேவனும், (எ - று.) கந்தமாதனத்துக் காவலனும், தேரானும் ஆகிய திவாகரதேவனும், என்க. |