4. வச்சிரதாடன்

833.

சுந்தரப் பொடியும் பூவுஞ் சுரும்பொடு துதைந்து வீசிச்
சந்திரன் றவழு மாடச் சக்கிர வாள மன்னன்
மந்தரம லைக்கும் யானை வச்சிர தாட னென்பான்
அந்தரத் 1தமரர் னணிந்துபோந் தனைய நீரான்.

      (இ - ள்.) சுந்தரப்பொடியும் - அழகிய மணப்பொடியும், சுரும்பொடு பூவும் -
அளிகளுடனே மலர்மாலைகளும், வீசி - ஊடிய மகளிர்கள் வீசுதலாலே, துதைந்து -
செறியப்பட்டு, சந்திரன் தவழும் மாடம் - திங்கள் தவழ்கின்ற மேனிலைமாடங்களையுடைய,
சக்கிரவாள மன்னன் - சக்கிரவாளகிரிக்கு அரசனும், அந்தரத்து அமரர்கோமான் -
வான்உலகை ஆளும் இந்திரன், அணிந்து போந்தனைய நீரான் - அழகு செய்துகொண்டு
வந்தாற்போன்ற அழகுடைய பெற்றியானும், மந்தரம் மலைக்கும் யானை - மந்தர
மலையொடு போர்செய்யும் பரிய யானையையுடையவனுமாகிய, வச்சிரதாடன் என்பான்-
வச்சிர தாடன் என்னும் பெயருடையானும், (எ - று.)

     சக்கிரவாளத்து மன்னனும், யானையை உடையானும், இந்திரனை ஒத்தவனும் ஆகிய
வச்சிரதாடனும், என்க.

( 7 )