(இ - ள்.) மெல் நரம்பு அனுக்கும் தீஞ்சொல் - மெல்லிய யாழின் நரம்பை வருத்தும் இனிய சொல்லையுடைய, மெல்லியலார்தம் - மென்மைத் தன்மை மிக்க மகளிர்களின், பாடல் - இசைப்பாடல், கின்னரம் பிணிக்கும் -கின்னரப் பறவைகளைக் கட்டுதலைச் செய்யும், செய்கை - செயலையுடைய, கிருதமாதனத்தைக் காப்பான் - கிருதமாதனத்தைக் காவல்செய்வான், கை நவின்று இலங்கும் செவ்வேற் காவலன் - கையிடத்தே பொருந்தி விளங்கும் செவ்விய வேலையுடைய அரசன், கருடன் சேர்ந்த - கருடன் என்னும் சொல் சேர்ந்த, மெய் நவின்று இலங்கும் செம்பொன் - உடலிடத்தே பொருந்தித் திகழும் செவ்விய பொன்னாலியன்ற, அங்கதம் - அங்கதம் என்னும் சொல், விளைத்தபேரான் - தோற்றுவித்த கருடாங்கதன் என்னும் பெயருடையானும், (எ - று.) அங்கதம் - தோள்வளை. கருடன் சேர்ந்த அங்கதம் விளைத்த பேர். கருடாங்கதன் என்பதாம். கிருத மாதனத்து மன்னனும் வெவ்வேலுடை யோனும் ஆகிய கருடாங்கதனும் என்க. |