சடிமன்னன் இவ் வெண்மரையும் அரசியலோம்பப்
பணித்தலும், படைகள் பண்ணுறுத்தலும்
838.

என்றிவ ரெண்மர் தம்மை யிரதநூ 2புரத்து ளானா
நின்றுநீர் காமி னென்று நிறீஇயபின் னீதி மன்னன்
ஒன்றிய வுலக மெல்லா மொருங்குடன் விழுங்க லுற்றுச்
சென்றுயர் கடலோ டொக்குஞ் சேனைபண் 1ணமைக்க வென்றான்.

      (இ - ள்.) என்று இவர் எண்மர் தம்மை - என்று இன்னணம் புகழப்பட்ட
இவ்வரசர் எண்மரையும் அழைத்து, நீர் - நீயிர், இரதநூபுரத்துள் ஆனா நின்றுகாமின்
என்று - இவ்விரதநூபுரத்துள் இருந்து ஒழியாது இந்நாட்டைக் காவல் செய்யுங்கோள் என்று
பணித்து, நிறீஇயபின் - அவரை அங்ஙனமே அமைத்த பின்னர், நீதிமன்னன் - இரதநூபுரந்
நகரத்தில் வீற்றிருந்த செங்கோல் மன்னன் ஆகிய அச்சடி மன்னன்; ஒன்றிய உலகம்
எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று - பொருந்திய உலகம் முழுவதையும் எஞ்சாமல்
விழுங்குதற்பொருட்டு, சென்று உயர்கடலோடு ஒக்கும் - பெருகிப் படர்ந்து எழுகின்ற
ஊழிக்காலத்துக் கடலையே நிகர்க்கும், சேனை - தன் படைகளை, பண் அமைக்க என்றான்
- ஒப்பனை செய்க என்று கட்டளையிட்டான், (எ - று.)

     என்ற இவ்வெண்மரையும் அழைத்துத் தன் அரசு காவலை அவர் பால் வைத்துக்
காமின் என்று நிறுவிய பின்னர், கடலொடு ஒக்கும் தன் சேனையைப் பண்ணுறுத்துக
என்றான், என்க.

( 12 )