காதல்தீ வளர்க்குங் காளைப்பருவம்

84.

திருவளர் 1செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்.
 

     (இ - ள்.) திருவளர் செல்வர்மேல் - அழகுமிக்க அரசிளங்காளைகளின்மேல்; சென்ற
சிந்தை நோய் - செல்லுகின்ற மனநோயாகிய காதல்நோய்; ஒருவரின் ஒருவர் - ஒருவரைப்
பார்க்கினும் மற்றொருவர்; மிக்கு உடையர் ஆதலால் - மிகுதியாகக் கொள்வதனால்
அவ்விசயதிவிட்டர்; உருவளர் கொம்பனார் - அழகு வளரும் பூங்கொம்பைப்போன்ற
பெண்களின்; உள்ளம் காய்வது ஓர் - உள்ளத்தைச் சுடுவதாகிய ஒப்பற்ற; எரி
வளர்த்திடுவது - காதல்தீயை வளர்க்கத்தக்க; ஓர் இளமை எய்தினார் - சிறந்த
காளைப்பருவத்தை யடைந்தார்கள். (எ - று.)

     அந்த மங்கையர்கள் கொண்ட காமநோய் ஒருவரைப் பார்க்கினும் மற்றொருவருக்கு
மிகுதியாக இருந்தது. ஆகவே விசய திவிட்டர்கள், அம் மங்கையரின் காதல் தீயை
வளர்த்திடற்குரிய நல்ல இளமைப் பருவத்தையடைந்தார்கள் என்க.

( 15 )

?@