848.

பாரித்த பவழத் திண்காற் பளிங்குபோழ் பலகைதன் மேற்
பூரித்த 2சுடரின் செம்பொற் போதிகைப் புடங்க டோறு
மூரித்தண் 3சுடர்வெண் முத்தின் பரூஉத்திரண் முயங்கி ஞால
வேரித்தண் டுவலை கால மாலைகள் விசித்த வன்றே.

     (இது முதல் 9 செய்யுள்கள் விமானத்தின் சிறப்புக்கூறும் ஒரு தொடர்)

     (இ - ள்.) பாரித்த பவழம் திண்கால் - பருத்த பவழத்தாலியன்ற திண்ணிய
கால்களையும், பளிங்குபோழ் பலகைதன் மேல் - பளிங்கு அரிந்து இயற்றிய
பலகைகளின்மேல், பூரித்த சுடரின் செம்பொன் போதிகை - நிறைத்த ஒளியுடைய
பொன்னாலியன்ற குறுந்தறிகளையும் உடையதாய்,

    புடங்கடோறும் - நுனிகள்தோறும், மூரித்தண் சுடர்வெண்முத்தின் பரூஉத்திரள்
முயங்கி ஞால - பெரிய குளிர்ந்த வெள்ளொளியையுடைய முத்தின் மாலைகளானாய பருத்த
தொங்கல்கள் பொருந்தித் தூங்க, வேரித்தண் துவலை கால மாலைகள் விசித்தவன்றே-மண
முடைய குளிர்ந்த தேன்துளிக்கும்படி மாலைகள் கட்டப்பட்டுள்ளன, (எ - று.)
அவ்விமானம், பவழத் தூண்களையுடையதாய்ப் பளிங்குப் பலகையின் மேல் பொன்
போதிகை பொருந்திய நுனிகளில் முத்துமாலைகள் தூங்கவிடப் பட்டதாய் மலர்
மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டதென்க.

( 22 )