850.

ஊன்றிய மகரப் பேழ்வா யொளிமுகந் 1தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணிசெய் தாம நகைமுக நிறைந்த சோதி
கான்றன கனக சாலங் கலந்தன கங்க ணீகம்
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில்.

     (இ - ள்.) மகரம் பேழ்வாய் ஊன்றிய ஒளிமுகம் - பெரிய வாயை யுடைய மகரமீனின்
முகவடிவிற்றாய் இயற்றி ஊன்றிய ஒளிமுகம் என்னும் உறுப்பின்கண், தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணிசெய்தாமம் - மிளிர விழுந்து தொங்குவனவாகிய மணியாற் செய்யப்பட்ட மாலைகள், நகைமுகம் நிறைந்த சோதி கான்றன - தம் நகுகின்ற முகங்களில் நிறைந்துள்ள ஒளியை வீசின, கனக சாலம் - பொன்குவியல்கள், கலந்தன - தம்சோதியை அவற்றோடு கலந்து வீசின, கங்கணீகம் தோன்றின - கங்கையின் அலைகள் போன்று தோன்றியவாய, பதாகை - கொடிகளும், சூலம் ஞாயில் - சூலங்கள் ஞாயில் களும், சுடர்ந்தன - ஒளி வீசின, (எ - று.)

     கங்கணீகம் - கங்கையின் அலை. ஒளிமுகம் - முகப்பு. முகப்பின் கண் மணிமாலைகள்
தூங்கி ஒளிபரப்பின என்க.

( 24 )