862.

காவன்மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும்
வாவியகி னாறுமணி வாயிலவை நீங்கி
நாவிகமழ் கொம்பனைய நங்கைநகை வேலான்
தேவியமர் கோயிலது செவ்வன மடைந்தாள்.
 

      (இ - ள்.) கன்னியர்கள் காக்கும் - இளமகளிர்களால் காவல் செய்யப்பட்ட,
காவல்மிகு கன்னிநகர் - காவற்றொழில் மிக்க கன்னி மாடத்தின், அகில் வாவிநாறும் -
அகிற்புகை தாவிப்படர்ந்து மணங்கமழும், வாயிலவை நீங்கி - பல வாயில்களையும் கடந்து,
நாவிகமழ் கொம்பு அனைய நங்கை - கத்தூரி மணங்கமழும் பூங்கொம்புபோலப்
பொலிவுற்றுத் திகழும் சுயம்பிரபை, நகை வேலான் - ஒளியுடைய வேலேந்திய
சடிமன்ன னுடைய, தேவியமர் - பெருந்தேவி வதியும், கோயிலது - அரண்மனையை,
செவ்வனம் - நேரிதின், அடைந்தாள் - எய்தினாள், (எ - று.)

     சுயம்பிரபை கன்னிமாடத்தை அகன்று, தன் நற்றாயின் அரண் மனையை எய்தினாள் என்க.

( 36 )