(இ - ள்.) சீரியன செம்பொன் அணிசேரின் - சிறந்த திண்மை யுடையனவாகிய செம்பொன்னாலியன்ற வல்லணிகலன்கள் அணியப்பெற்றால், இடைநோம் என்று - சுயம்பிரபையின் மெலிந்தொல்கும் சிற்றிடை வருந்து மென்றுகொண்டு, அம்பொன் அணிநொய்யன அணிந்து - அழகிய பொன்னாலாகிய மென்மை மிக்க அணிகலன்களையே அணிந்து, அலர்மிலைச்சி - மலர்மாலை சூட்டி, வம்பின் அணி வாட்கண் இடை - புதுமையால் அழகுற்றுத் திகழும் வாள்போன்ற கண்களின் இடையே, மை பிறழவைத்து - மை ஒளிரத் தீட்டி, கொம்பின் அனையாள் - பூங் கொம்பை ஒத்த சுயம்பிரபை, குளிருமாறு - உளம் மகிழும்படி, குயில்வித்தாள் - ஒப்பனை செய்தாள், (எ - று.) செம்பொன்னாலாய வல்லணிகள் அணிந்தால் பொறாது நுண்ணிடை நோமென்று கருதி, நொய்ய பொன்னணியே அணிந்து, அலர் மிலைச்சி, வாட்கண்ணிடை மைதீட்டிக் குளிருமாறு ஒப்பனை செய்தாள் என்க. |