873.

சிகர யானையின் கவிழ்மணி சிலம்பின
     சிலம்பின பணிலங்கள்
முகர வாயின பணவங்கண் முரன்றன
     முரன்றன முகிலெல்லா
1மகர மால்கடல் வரைமிசை 2யெழுந்தென
     வெழுந்தது படைமாற்ற
நகர வாயிலின் புறம்பணை 3நடுங்கின
     நடுங்கின கொடி யெல்லாம்.
 

     (இ - ள்.) சிகரயானையின் கவிழ்மணி சிலம்பின மத்தக முடியையுடைய யானைகளின்
மருங்கே கவிழ்ந்து தூங்கும் மணிகள் ஒலித்தன, பணிலங்கள் சிலம்பின - சங்குகள்
ஒலித்தன, முகரவாயின -ஒலிக்கும் இயல்புடையவாயையுடைய, பணவங்கள் - முரசுகள், முரன்றன - ஒலித்தன, முகில் எல்லாம் மகரமால்கடல் வரைமிசை எழுந்து முரன்றன என - மேகங்கள் அனைத்தும் மகர மீன் திரிகின்ற கடலினின்றும் போந்து மலைகளின் வந்து குழுமி முழங்கலாயின என்று கூறும்படி, படைமாற்றம் எழுந்தது - நால்வகைப் படைகளின் முழக்கம் எழுந்தது, நகரவாயிலின் புறம்பணை இரத நூபுர நகரத்தின் மருங்கிலுள்ள நிலங்களெல்லாம், நடுங்கின - அதிர்ந்து நடுக்கங்கொண்டன, கொடியெல்லாம் நடுங்கின - கொடிக்குழாங்களும் ஆடின, (எ - று.)

     முகரம் - ஒலி. யானைமணிகள் ஒலித்தன; சங்கொலித்தன; முரசங்கள் முழங்கின;
முகில் முழக்கம்போலே படை முழங்கின; நிலம் அதிர்ந்தது; கொடி ஆடின; என்க. நானில
மாகலின் பன்மையாற் கூறினர்.

( 47 )