இதுவுமது

877.

இரைக்கு மஞ்சிறைப் பறவைக
     1ளெனப்பெய ரினவண்டு புடைசூழ
நுரைக்க ளென்னுமக் குழம்புகொண்
     2டெதிர்ந்தெழ நுடங்கிய விலையத்தாற்
றிரைக்க ரங்களிற் செழுமலைச்
     சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்
தரைக்கு மற்றிது குணகடற்
     3றிரையொடும் பொருதல தவியாதே.
 

      (இ - ள்.) இரைக்கும் அம்சிறை பறவைகள் எனப் பெயர் இனவண்டு - முரல்கின்ற
அழகிய சிறகுகளையுடைய, அறுகாற் சிறுபறவைகள் என்னும் பெயரையுடைய
அளிக்குலங்கள், புடைசூழ - பக்கத்தே மொய்க்க, நுரைக்கள் என்னும் அக்குழம்பு கொண்டு
- நுரைத்த தேன் என்னும் அழகிய குழம்பு களை ஏந்திக்கொண்டுவந்து இட்டு, எதிர்ந்து
எழ - கரையைமோதி மறித் தொழிதலால், இலையத்தால் - முறை பிறழாமே, நுடங்கிய -
மடங்கி வீழ்தலுடைய, திரைக்கரங்களில் - அலையாகிய தன் கைகளாலே, செழு மலைச் சந்தனத்திரள்களை - செழிப்புடைய மலையினின்றும் தான் வாரிக் கொடுவந்த
சந்தனக்குறடுகளை, கரைமேல் வைத்து அரைக்கும் - கரையாகிய கல்லின் மேலேயிட்டு
அரைக்கின்ற, மற்று இது - இக்கங்கையாற்றின் வெள்ளம், குணகடற்றிரையொடும் -
கீழைக்கடலின் அலைகளோடு, பொருது அலது அவியாதே - போர்செய்து அடங்குவதன்றி
இடையே அமையாது என்பதாம், (எ - று.)

     அஞ்சிறைப் பறவைகள்போலக் சுட்டம் கூட்டமாய்ப் பெயர்ந்து செல்லும் இனவண்டு
எனினும் ஆம். இலையம் - லயம் - அலைகள் ஒன்றுபோல அனைத்தும் கரையை மோதி
மோதி மீள்தலின் இலயம்பட, என்பார் இலையத்தால் என்றார். இலையம் - கூத்து,
கூத்திடுமாறுபோல எனினும் பொருந்தும்.

( 51 )