(இ - ள்.) முந்து நிகழ் யாறு - பாவாய்! இதோ நம் முன்னர்த் தோன்றி ஓடும்யாறு, மற்றிதன் முதன்மலைப் பிறந்து - இவ்விமயமலையின் முன்னர் உள்ள அப் பொன்மலையிலேயே தோன்றி, நம் மலையது முழைப்பேரும் - நமது மலையின் பிலத்தினூடே வந்திழிகின்றதும், செழுங்கலம் சிதர்கின்ற வலத்தது - பெரிய மரக்கலங்களைச் சிதைத்தொழிக்கும் விரைவினையுடைய நீர் ஒழுக்குடையதும் ஆகிய, சிந்து என்பது - சிந்து என்று சிறப்பாகச் சொல்லப்படும் யாறு ஆகும், அது பருகுங்கால் - அதன் எழிலைக் கூறுமிடத்தே, நுந்து பொன் ஒளித் திரையெனும் - மிகுகின்ற பொன்னிறமுடைய அலைகள் என்னும், கரதலப்புடங்களின் - தன்கைகளின் நுனியில், நுரை என்னும் பந்து - நுரை யென்னும் வெண்பூப்பந்து, பொங்க நின்று அடித்திட - உயர்ந்தெழுமாறு நின்று புடைத்து, திளைப்பது ஒத்துளது - ஆட்டயர்தலை ஒத்துத் தோன்றுகின்றது, (எ - று.) |