880.

தேனெய் பாலொடு கலந்தன சின்மொழிச்
     சிறுநுதற் றிருவேநஞ்
சேனை மாமுகிற் படலங்கண் 2மிசைச்செலச்
     சினைமுகில் முரலக்கேட்
3டேனை யானைக ளிணையன விருந்திட
     விருங்கைமா வினங்காக்கும்
4கான யானைகள் கருவரை யனையன
     கனல்வன விவை காணாய்.

    (இ - ள்.) தேன் நெய் பாலொடு கலந்தன - தேனையும் நெய்யையும் தீம்பாலோடு
அளாயது போன்று சுவைதரும், சின்மொழி - சிலவாய மொழிகளையும், சிறுநுதல் - சிறய
நெற்றியையும் உடைய, திருவே - திருமகளே!, நம் சேனை - நம்முடைய படைகள், மாமுகிற்
படலங்கள் மிசைச் செல - கரிய மேகக்குழாங்களின் ஊடே செல்வனவாக, சினை முகில் -
கருவுற்ற முகில்கள், முரல்வ கேட்டு - முழங்குதலைக் கேட்டு, ஏனை யானைகள்
இணையென இருந்திட - மற்ற யானைகள் தத்தம் இணையாகிய யானைகளே பிளிறுவன
எனக்கருதி வாளாவிருப்ப, இருங்கை மாவினம் காக்கும் - பெரிய துதிக்கையினையுடைய
யானைக் கூட்டங்களை ஓம்பும், கான யானைகள் - காட்டியானைகளாகிய யூதநாதன்
என்னுங் களிறுகள், கருவரை அனையன - கரிய மலையை நிகர்ப்பன, கனல் வன - தத்தம்
பகை யானைகள் பிளிறுவனவாகக் கொண்டு சினப்பன, இவை காணாய் - இவற்றையும்
காண்க, (எ - று.)

     காக்கும் கானயானை என்றது யூதநாதர்களை, திருவே! சினைமுகில் முழங்குதல்
கேட்டுக் காட்டியானைகளின் தலைமை யானைகள் பகையானை பிளிறுவனவாகக் கருதிச்
சினப்பதனைக் காண் என்றாள், என்க.

( 54 )