888.

இலைய நாடகத் 3தெழில்கெழு விமானமஃ
     தியல்கின்ற விசைதன்னான்
மலையி னம்மொடு வருவவொத் துளவவை
     வரவில மடனோக்கி
உலைவில் வையகத் தொளிசெயும் பகலவ
     னூறுசுடர் சொரிகின்ற
வலையங் கையல வருவது மற்றிதன்
     சலத்தது வலிகண்டாய்.

          (இ - ள்.) எழில் கெழு விமானம் - அழகு பொருந்திய இவ்விமானம், இலைய
நாடகத்து - இலயத்துடன் ஆடும் கூத்தின் இயக்கம் ஒப்ப, இயல் கின்ற விசை தன்னால் -
இயங்குகின்ற வேகம் உண்மையால், உலைவில் வையகத்து ஒளிசெயும் பகலவன் -
கெடுதலில்லாத உலகிற்கு ஒளிதருகின்ற கதிரவன், உறு சுடர் சொரிகின்ற - பொருந்திய
ஒளியை வீசுகின்ற; வலையம் - நில வட்டமும், மலையினம்மொடு - மலைக்கூட்டங்களும்,
வருவ ஒத்துள - இயங்குதலை ஒத்துத் தோன்றுகின்றன, மடன் நோக்கி - மடப்பமுடைய
பார்வையுடையவளே!, அவை வரவில - அவைகள் உண்மையில் அங்ஙனம் வருவனவல்ல,
கையல - தொழிற்படுவனவல்லவாய அவைகள், வருவது - வருவனப்போலத் தோன்றுவது
எற்றாலெனின், மற்றிதன் வசத்தது வலி கண்டாய் - இவ்விமானத்தின் இயக்கவன்மையால்
உண்டாயதொரு மயக்கக் காட்சியே காண் ! (எ - று.)

     மடனோக்கி! நம் விமானம் இயங்குதலாலே, நிலமும் மலைகளும் இயங்குவன போலத்
தோன்றுகின்றன; நிலையியற் பொருளாகிய அவைகள் உண்மையில் இயங்காதனவாகவும்,
இயங்குவன போற்றோன்றுவது மயக்கக் காட்சியே என்றாள், என்க.

( 62 )