890.

மோடு விட்டலர் மொய்ம்மலர்க் காவினுள்
பாடி விட்டது பாவைதன் கோன்படை
1கூடி விட்டிளை யாரன கோதைமேன்
மூடி விட்டமர் தேன்முரி வித்தவே.
 

      (இ - ள்.) மோடு விட்டு அலர் மொய்ம்மலர் காவினுள் - உயர்ந்து மலர்ந்துள்ள
மலர்கள் செறிந்த திருநிலையகம் என்னும் அப் பூம்பொழிலில், பாவைதன் கோன்படை -
சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் படை, பாடிவிட்டது - இயங்கிற்று,
கூடிவிட்டிளையாரன கோதைமேல் - அங்குக் கூடிய இளமையுடைய மகளிரினுடைய மலர்
மாலைகளின்மேல். தேன் - அளிக்குலங்கள், மூடிவிட்டு - மொய்த்து மூடி, அமர் முரிவித்த
- போர்தொடுத்தன, (எ - று.)

     மோடுவிடல் மோடிடல், பாடிவிடுதல் - படைகள் தங்குதல். கூடிவிட்டு - கூடி.
இளையாரன : ஆறாவதன் பன்னை யுருபு. திருநிலையகம் என்னும் பூம்பொழிலிலே
சடிமன்னன் படைகள் இறங்கின; அவ்விடத்தே மகளிரின் குழலிலே வண்டுகள் மொய்த்துப்
போரிட்டன என்க. வண்டுகள் மொய்த்து அமர் செய்தன என்றது அப்பொழில் வளத்தைச்
சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது.

( 64 )