895.

செம்பொன் மாளிகை யும்வயி ரத்திரட்
1ம்ப முற்ற தமனியக் கூடமு
மம்பொன் னாடரங் கும்மகிற் சேக்கையும்
வம்பு நீர்மைய வாய்வளங் கொண்டவே.
 

     (இ - ள்.) செம்பொன் மாளிகையும் - செவ்விய பொன்னாலியன்ற மாளிகைகளும்,
வயிரத்திரள் தம்பமுற்ற - வயிரம் என்னும் மணியாற்றிரண்ட தூண்களையுடைய,
தமனியக்கூடமும் - பொன்னம்பலங்களும், அம் பொன் ஆடரங்கும் - அழகிய
கூத்தாடுதற்குரிய பொன்அரங்கிடங்களும், அகிற் சேக்கையும் - அகிற்புகை கமழும் படுக்கை
யிடங்களும், வம்பு நீர்மையவாய் - புதுமைத் தன்மை பொருந்தியனவாய், வளங்கொண்ட -
வளப்பங்கொண்டமைந்தன, (எ - று.)

     மாளிகையும், தமனியக் கூடமும், ஆடரங்கும், படுக்கை யிடங்களும் புதிய முறையிலே
அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க.

( 69 )