வாயில் காப்போர் உலகு காப்போன்
வரவை எதிர்பார்த்தல்
90. விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ 1தெண்ணினார்.
 
     (இ - ள்.) விரைஅமர் கோதையர் - மணம்பொருந்திய மாலையை அணிந்தவரும்;
வேணுக்கோலினர் - மூங்கிற்கோலைக் கையிலுடையவர் களுமாகிய காவன்மகளிர்;
உரைஅமர் - புகழ் பொருந்தியதும்; காவல்பூண் கடையின் ஊடுபோய் - தாங்கள்
காத்தலைச் செய்கின்றதுமாகிய வாசல்களின் ஊடே உலாவி நின்று; முரசு அமர்
முழங்குஒலி மூரித்தானையன் - முரசுகள் பொருந்தி முழங்குகின்ற ஒலியோடுகூடிய
பெருமை பொருந்திய படைகளை யுடைய பயாபதி அரசன்; அரசு அவைமண்டபம்
அடைவது - திருவோலக்க மண்டபத்திற்கு வருதலை; எண்ணினார் - எதிர்பார்த்தார்கள்.
(எ - று.)

      இவர்கள் மகளிர் என்பதுதோன்ற 'விரையமர் கோதையர்' என்றார். வாயில்
காப்போர் யாவரும் அவரவர்கட்குரிய வாயில்களினின்று உலாவிக்கொண்டு அரசன் கொலு
மண்டபத்திற்குச் செல்வதை எதிர் பார்த்திருந்தார்கள். வேணு - மூங்கில்.
 

( 21 )