903.

இரவல ரிருநெதி கவர்க 2வீண்டியற்
புரவலர் வருகெனப் போக தூதுவர்
திருவலர் சினகரன் செல்வப் பொன்னகர்
விரவலர் மழையொடு விழவு செய்கவே.

           (இ - ள்.) இரவலர் இருநெதி கவர்க - ஏற்போர் பெருஞ்செல்வம்மிக்க நம்
கருவூலத்தே புக்குத் தாம் வேண்டியவற்றை அள்ளிக்கொள்க, ஈண்டு இயல் புரவலர்
வருகென தூதுவர் போக! - நம் போதனமா நகரத்திற்கு அரசியல் மிக்க வேந்தர் வருக
என்றழைத்தற் பொருட்டு நம் தூதுவர்கள் அவ்வரசர்பால் செல்க, திரு அலர் சினகரன்
செல்வப் பொன் நகர் - எல்லா நன்மைகளும் விரிதற்குக் காரணமான அருகக்கடவுளுடைய
திருக்கோயிலின்கண், விரவு அலர் மழையொடு விழவு செய்கவே -பொன்னும் மணியும்
விரவிய மலர் மழை பொழியுமாறு திருவிழாக்கள் எடுத்திடுக, (எ - று.)

     இயற் புரவலர் என்றான், செங்கோன்மை பிறழாதவரும் மாண்புடைய மன்னர்
குடிப்பிறந்தவருமாகிய அரசர் என்றற்கு. நற்செயலைச் செய்யத் தொடங்குமுன் தெய்வங்கட்கு
விழாச் செய்து தொடங்குதல் தமிழர் மரபென்க.

( 77 )