பயாபதி மன்னன் சித்திரதரனுக்குப் பணித்தல்

918.

தேங்கம ழலங்கன் மார்பன் சித்திர தரனைக் கூவிப்
பாங்கமை பஞ்சும் பட்டுந் துகில்களும் பரப்பி மேலால்
வீங்கிய சுடர வாய மிடைமணிக் கலன்கள் 3விஞ்சை
நீங்கருந் திறலி னான்ற னெடுநகர் நிறைக்க வென்றான்.

     (இதுமுதல் 6 செய்யுள்கள் ஒருதொடர்)

     (இ - ள்.) தேங்கமழ் அலங்கல் மார்பன் - தேன் மணம் கமழ்கின்ற மலர்மாலை
சூட்டப்பட்ட மார்பினையுடையனாய, சித்திரதரனைக் கூவி - சித்திரதரன் என்னும்
தலைமைப்பணியாளன் ஒருவனை விளித்து, பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் -
நேரிதான பஞ்சாடைகளும் பட்டாடைகளும் ஏனைய துகில்களும், பரப்பி - விரித்து,
மேலால் - அவையிற்றின்மேல், வீங்கிய சுடரவாய பிடைமணிக் கலன்கள் - மிக்க
ஒளியுடையனவாகிய மணிகள் செறிந்த அணிகலன்களை, விஞ்சை நீங்கருந் திறலினான்றன்
நெடுநகர் - வித்தையகலாத ஆற்றலுடைய சடியின்பாடி அரண்மனையகத்தே, நிறைக்க
என்றான் - நிறைத்து வைக்கக்கடவாய் என்று பணித்தான், (எ - று.)

     பஞ்சும் பட்டும், அல்லாத மயிர் முதலியவற்றாலாய கம்பளங்கள் முதலியவற்றையும்
இனம்பற்றித் துகில் என்றான் ; இனி துகில் - வெண் பட்டெனினுமாம், விஞ்சை - வித்தை.
விஞ்சையன் - விச்சாதர மன்னன்
எனினுமாம்.

( 92 )