(இ - ள்.) தேங்கனி - தெங்கங்கனிகளும், குழவித் தீநீர் - தெங்கிளநீர்க் குரும்பைகளும், செம்பழத் திரள் - தேமா பலா வாழை முதலிய செவ்விய பழக்குவியல்களும், இன் கண்ணி - இனிய மலர்க்கண்ணிகளும். பாங்கு அமை - பக்குவம் அமைந்த, பளிதச் சாதி - கத்தூரி வகைகளும், பாசிலைத் தழையின் கற்றை - வெற்றிலையாகிய தழைக்கற்றைகளும், தீங்கழைக் கரும்பின் கட்டி - இனிய கழியாகிய கரும்பின் சாற்றாலாய கற்கண்டும், திரள் நறைக் கடிகை - திரண்ட சாதிக்காயும், இன்ன - இன்னோரன்ன பிறவும், தோம் கலந்திலாத சொல்லான் - குற்றமற்ற வாய்மையாளனாகிய சடிமன்னனுடைய, தொன்னகர் - அரண்மனையிடத்தே, சொரிக-கொட்டுக, என்றான்-என்று பணித்தான், (எ-று.) தேங்கனி - முதிர்ந்த தேங்காய். குழவித்தீநீர் - இளநீர்க் குரும்பை. பாசிலைத் தழை - வெற்றிலை. தொன்னகர் - திருநிலையகம். பழைதாகலின், அதன்கணமைந்த அரண்மனையையும் தொன்னகர் என்றான். |