926.

அருளறிந் துழைய ரோடி யரசுவா வருக வென்ன
மருளிவண் டுழலுந் தாரை மழகளி றதனை 1மேய்ப்பான்
இருளிருங் குன்ற மேய்க்கு 2மிரும்பிண ரெருத்த மேறி
வெருவரு மொழியிற் றேறி மேன்முறைத் தொழில னானான்.

     (இ - ள்.) அருள் அறிந்து உழையர் ஓடி - வேந்தன் கட்டளையிட்டருளியதை
அறிந்த பணியாளர்கள் விரைந்தோடி, அரசுவா வருக என்ன - நம் அரசயானை வருவதாக
என்று அக்கட்டளையை அறிவித்தலும், மருளிவண்டுழலும் தாரை - வண்டுகள்
மயக்கங்கொண்டு உழல்தற்கு ஏதுவாகிய மதநீரைத் தாரையாகப் பொழியும், மழகளிறதனை
-இளமை மிக்க அக்கோக்களிற்றை, மேய்ப்பான் - ஓம்புகின்ற பாகன், இருள் இருங்குன்றம்
ஏய்க்கும் - இருண்ட பெரிய மலையினை ஒக்கும் அவ்வியானையின், இரும்பிணர் எருத்தம்
ஏறி - பெரிய சருச்சரையுடைய பிடரின்கண் ஏறி இருந்து, வெருவரும் மொழியில் தேறி -
அஃதஞ்சுதற்குக் காரணமான யானை மொழியினாலே அதனைத் தெளியச்செய்து, (இனிதே
நடத்துதலின்) மேன் முறைத் தொழிலன் ஆனான் - பாகு நூல் வல்லாருள் சிறந்த
தொழிலையுடையன் ஆயினான், (எ - று.)

     மேன்முறைத் தொழிலன் - யானைமேலிருந்து நடத்தும் தொழிலன் ஆனான்
எனினுமாம். அரசுவா - பட்டத்தியானை. மேய்ப்பான் - யானைப்பாகன்.

( 100 )