949.

சங்குபோ லொளியவன் றாதை தன்படை
கங்கைபோற் படர்ந்தது கலக்குங் காதலா
லிங்குநீர் யமுனையி னிழிவ தொத்தது
மங்குல்சேர் மணிவரை மன்னன் றானையே.

     (இ - ள்.) சங்குபோல் ஒளியவன் தாதைதன் படை - சங்கினது நிறத்தை ஒத்த
நிறமுடைய விசயன் தந்தையாகிய பயாபதியின் பெரும்படை, கங்ைகைபோற் படர்ந்தது
- கங்கையாறு செல்வது போன்று சென்றது, மங்குல்சேர் மணிவரை மன்னன் தானை -
முகில்தவழும் அழகிய இமயமலைக்கு அரசனாகிய சடியின் பெரும்படை, கலக்குங்காதலால் -
அக்கங்கை யாற்றினோடு கலக்கும் ஒரு விருப்பத்தாலே, இங்கு - இவ்விடத்தே, யமுனையின்
நீர் இழிவது ஒத்தது - யமுனையாற்றின் வெள்ளம் விரைந்து செல்லுதலை ஒத்துச் சென்றது,
(எ - று.)

     பயாபதியின்படை கங்கையாற்றைப் போன்று படர்ந்தது; சடியின் படை அவ்வியாற்றிற்
கலக்கும் யமுனைபோல விரைந்ததென்க.

( 123 )