அரசன் அணையில் வீற்றிருக்குங் காட்சி | 95. | குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும் அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச் செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன் வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த 4வெய் யவனோ டொத்தான். | (இ - ள்.) குஞ்சரம் குழவி கவ்வி - யானைக்குட்டியைத் துதிக்கையாற் பற்றியுள்ளதும், குளிர்மதி கோடுபோலும் அம்சுடர் எயிற்ற - குளிர்ச்சியுள்ள இளம்பிறை வடிவத்தையொத்த அழகிய ஒளியுள்ள தந்தங்களையுடையதும் ஆகிய, ஆளி - யாளியினது; அணிமுகம் மலர ஊன்றி - அழகிய முகத்தின் வடிவமாக அமைந்த படிக்கட்டினை மிதித்து; செம்சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை - சிவந்த ஒளியையுடைய அழகிய பொன்னாற் செய்யப் பெற்ற அரியணையின்மீது; சேர்ந்த செல்வன் - ஏறியமர்ந்த பயாபதி மன்னன்; வெம்சுடர் உதயத்து உச்சி - விரும்பத்தக்க செவ்விய ஒளியோடு கிழக்கெழு மலையின் முடியில்; விரிந்த வெய்யவனோடு ஒத்தான் - தோன்றி விளங்குகின்ற கதிரோனைப் போன்று காணப்பட்டான். (எ - று.) பயாபதி மன்னன் ஏறியமர்ந்துள்ள அரியணைக்குரியபடி யானைக் குட்டியைத் துதிக்கையாற் பற்றியுள்ள யாளியைக் கவ்வி மிதித்து நிற்கும் ஆளி வடிவமாகச் செய்யப்பட்டுள்ளதென்க. இஃது அத்தியாளி எனப்படும். மடங்கலணைக்குக் கிழக்கெழுமலையும் அரசனுக்குக் கதிரவனும் உவமை. குழவி - இளமையுடையது, “மழவுங்குழவும் இளமைப் பொருள“ என்பது சூத்திரம். யானைக்குட்டி குழவியென்னும் பெயரைப்பெறும் என்பது, “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை“ என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாற் பெறப்படும். | ( 26 ) | | |
|
|